காந்தி சிலைக்கு டாட்டா ஏசி ஓட்டுநர் நலச் சங்கத்தினர் மாலை அணிவித்து
திருப்பத்தூர், ஆக.16-
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் டாடா ஏசி ஓட்டுநர் நலச்சங்கத்தின் சார்பில், புதுப்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து ஹவுசிங் போர்டில் உள்ள காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர் சக்திவேல், பொருளாளர் ரவி, துணை பொருளாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் தியாகராஜன் கலந்துகொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.















