பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பூங்குளம் கிராமம் அம்பேத்கர் நகர் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின்
நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை நேரங்களில் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பிறகு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வியாழக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, 2ஆம் கால யாக வேள்வி பூஜை, அதன் பின்னர் தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்று 9 மணி அளவில் கோபுரத்தில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் மற்றும் வினாயகர் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஹாகும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜேஷ் நாட்டாமை சண்முகம் , மணி, அன்பழகன், ராஜா ,துரைசாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இறுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.














