தரங்கம்பாடி அருகே மாமாகுடி
அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி
அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன் யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு கடந்த ஆறாம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பூர்ணா குதி நடைபெற்றது அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளா வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து கும்ப கலசத்தை அடைந்தது கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.














