தரங்கம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துல்லாகி உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கடையூரில் சாலை மறியல். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளையராஜா (48) இவர் நேற்று இரஇவர அவரது நண்பர் குருமூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் திருக்கடையூரில் இருந்து கிடங்கள் சென்று கொண்டிருந்தார் அப்போது திருக்கடையூர் அம்மனாறு அருகே நான்குவழி சாலை மேம்பாலத்தில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது அதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய குருமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பலியான இளையராஜாவின் உடல், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நான்கு வழி சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததால் தான் இளையராஜா இறந்ததாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருக்கடையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி சரவணன், பொறையார் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, தரங்கம்பாடி தாசில்தார் சதீஷ்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது இச்சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.















