பெங்களூரு: பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 2026ஆம் நிதியாண்டில் 20,000 புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப துறையில் ஊக்கமளிக்கும் இந்த அறிவிப்பு, தற்போதைய உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் பிற நிறுவனங்களில் காணப்படும் வர்த்தக சீர்கேடுகள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
தற்போதைய பொருளாதார சிக்கல்களை முன்னிறுத்தி டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் இதற்குப் பாதிப்பின்றி, இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரி ஜெயேஷ் சங்ராஜ்கா பேட்டியளிக்கையில், “நாங்கள் கடந்த 2025 நிதியாண்டில் மட்டும் 20,000 புதிய பட்டதாரிகளை நாங்கள் பணியில் இணைத்துள்ளோம். இப்போது, அதே எண்ணிக்கையை 2026ஆம் நிதியாண்டிலும் தொடர விருப்பம் உள்ளது,” என தெரிவித்தார்.
இந்த திட்டம், இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகளுக்கு மட்டுமின்றி, ஐடி துறையில் வேலை தேடும் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.