தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியது. சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை உங்கள் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.3,000 பணத்துடன், 1 கிலோ அரிசி, 1 கிலோ வெல்லம் மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட தொடக்க விழாவை விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் , விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. லட்சுமணன், கூட்டுறவு துணை பதிவாளர் மீனாட்சி சுந்தரம்
சார் பதிவாளர் மணிமொழி மற்றும் பானு
இணைந்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 122 குடும்ப அட்டைதாரர்களும் விழுப்புரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 32,000 குடும்ப அட்டைதாரர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறவுள்ளனர்.அரசு நலத்திட்டங்களில் ஒன்றாகிய இந்தப் பொங்கல் பரிசு திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.













