திருவள்ளுவர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், 1,166 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்:
திருவள்ளுவர் மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின், நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்,அதிகமாக பட்டா வழங்குவது இந்த நிகழ்ச்சியில்தான் என்று பெருமிதத்துடன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். மாவட்டத்தில், மூன்று உயர்மட்ட பாலங்கள், 16 பள்ளிக்கட்டடங்கள், 1,000 கனவு இல்லங்கள் உட்பட, 418 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ளப்பட்ட, 6,760 கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
கனவு இல்லம் திட்டத்தின்கீழ், 4,197 வீடுகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 377 வீடுகள், ஒன்பது தடுப்பணைகள் என, 390 கோடி செலவில், 7,369 புதிய கட்டுமான பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார். மாவட்டத்தை சேர்ந்த, 63,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள், விபத்து நிவாரண உதவி திட்டம் 30,202 பயனாளிகள் பயன்பெறும் வகையிலான மகளிர் சுயஉதவிக்குழு வங்கி கடன்கள், 1,000 விவசாயிகளுக்கு பசுந்தாள் விதைகள் வழங்கினார்.
மேலும் 32,636 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 1,432 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் என, 2.02 லட்சம் பேருக்கு, 357 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அரசு விழாவில் பங்கேற்க வந்த முதல்வருக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வழிநெடுகிலும், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.