இன்று தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பயிர் காப்பீட்டுத் தொகை 75 சதவீதமான விவசாயிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை வழங்கவில்லை விழுப்புரம் மாவட்டம் முழுதும் உள்ள கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது இதனை கால்நடைத்துறை சரியாக கவனிக்கவில்லை , உடனடியாக அனைத்து பகுதிகளிலும் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் .உறத்தட்டுப்பாட்டை போக்க கோரியும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். கரும்பு ,நெல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியும் இதுவரை மாநில அரசு அதற்கான கூடுதல் விலையை அளிக்கவில்லை இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் இன்று முற்றுகையிட்டு மனு தேசிய தென்னிந்திய விவசாய சங்கம் மாநில செயலாளர் அய்யனார் தெரிவித்தார்
