ராமேஸ்வரத்தில் நடைபெறவிருக்கும் ராணி அஹில்யா பாயின் 300 வது பிறந்தநாள் விழாவை கொண்டாட வருகை தந்த. பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் அச்சுந்தன் வயல் பிஜேபி கட்சி அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போதுபேசிய அவர் அதிமுக கூட்டணியில் பிஜேபி உள்ளதால் திமுக வினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.
மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசு வரும் தேர்தலில் படு தோல்வியை சந்திக்கும் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்ப்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும்.
இந்து கோவில்களில் அதிக அளவு மக்கள் கூடுவது பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து சொல்வது புதுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டப்பாக்கிற்கு விலை சொல்வது போல் உள்ளது எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.