ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என கூறி திமுக தயவால் வென்றவர்கள் தற்போது த.வெ.க விற்கு சென்றுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் மறையொட்டி அவரது இல்லத்தில் நேற்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் இறந்த கணேசன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து குடும்பதாருக்கு ஆறுதல் சொன்னார். பின்னர் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் மேட்டூர் அணை முழுகொள்ளவு தண்ணீர் இல்லை குறுவை சாகுபடிக்கு ஜுன் 12ம் தேதி திறப்பதற்கு வழியில்லை கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கர்நாடகாவில் மழை பெய்தால்தான் தண்ணீர் வரும்.
டெல்டா பகுதியில் கொள்முதல் நிலையங்களில் ரூ.60 லஞ்சம் வாங்குகிறார்கள். ஒருகுவிண்டால் நெல்லுக்கு ரூ.275 ஊழல் விவசாயிகளிடம் நடக்கிறது. நெல் கொள்முதல் செய்தும் மழையில் சேதமடைந்து லட்சக்கணக்கான டன் நெல் சேதமாகி கொண்டு இருக்கிறது. டெல்டா பகுதியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்கிறது. அதில் அரசு 40 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆனால் 18 லட்சம் டன் நெல் சேமிப்பதற்கான கிடங்குகள் மட்டுமே இங்கு உள்ளது. நெல் சேதமடைந்து உணவிற்கு வெளிமாநிலங்களில் நெல் வாங்கும் நிலை ஏற்படக்கூடாது. நெல் கொள்முதலில் ஊழலை அரசு தடுக்க வேண்டும். ஒரு டன் ரூ.3,500 வழங்க வேண்டும். 20 லட்சம் டன் நெல்சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். டெல்டா பகுதியை சேர்ந்தவரை வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது. டெல்டாவிற்கு தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்வி, சுகாதார கொள்கையில் தனிகவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. அவசியம் மருத்துவக்கல்லூரிகள் 6 மாவட்டங்களில் கொண்டுவர வேண்டும்.கும்பகோணம் தனிமாவட்டமாக உருவாக்க வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்ற சொன்ன காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகியவை கடுமையாக போட்டியிட்டார்கள். திமுக தயவால் வெற்றிபெற்றார்கள் தற்போது தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது திமுக ஆட்சியில் மக்களுக்கு கோபமில்லை என்று கூறினார். ஸ்டாலின் கவனத்திற்கு செல்லாமல் இருந்திருக்கலாம். திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. விளம்பர ஆட்சிதான் நடந்தது. உண்மை நிலவரத்தை ஸ்டாலின் கவனத்திற்கு கட்சியினர் கொண்டு செல்லவில்லை. பாமக ஆக்கப்பூர்வமான கட்சியாக செயல்பட்டுகொண்டு இருக்கிறோம். நல்லயோசனைகளை தமிழக முதல்வருக்கு சொல்வோம். நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறுசெய்தால் கடுமையாக எதிர்த்து பாமக போராடும். ஈரான்போரால் உலக முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் குறைவுதான் இருந்தாலும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் வலை உயர்வை மக்களிடம் கொண்டுசெல்லாமல் இருக்க வேண்டும். ஈரான் போரில் ஒருசில மாதங்களில் தீர்வுகிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 3 மாதத்திற்கு காஸ், கச்சாஎண்ணைகள் இ ருப்பதாக பிரதமர் சொல்லியிருக்கிறார்.
விஜய் ஆட்சிக்குவருவதற்கு முன்பு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினார். அதனை செய்ய வேண்டும். கடந்த திமுக ஆட்சிகாலத்தில் 4 லட்சத்து 96 ஆயிரம் கோடி கடன் வாங்கினார்கள். அதிமுக ஆட்சியில் 2021ல் நேரடி நிர்வாக கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி இருந்தது. திமுக வந்தவுடன் கூடுதலாக 5 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். மூலதன செலவுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி பயன்படுத்தி இருக்கிறது. மீதி ரூ.3.5 லட்சம் கோடி கடனுக்கு வட்டி கட்டுவதற்கு வாங்கி இருக்கிறார்கள். கடன் வாங்கினால் வளர்ச்சி, கட்டுமானங்கள் வேண்டும். நிதிநெருக்கடி சூழல் இருக்கிறது அதனை சரிசெய்ய வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும்.













