நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ராகுல் காந்தி டெல்லியில் தாக்கப்பட்டதை கண்டித்தும் மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது :-
நீட் தேர்வு முறைகேடு காரணமாக, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜமால் யூனுஸ் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்














