March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி

by Priscilla
August 9, 2025
in Cinema
A A
0
“விஜயின் முதல் படம் சரியாக போகவில்லை… அதனால் விஜயகாந்த் செய்த அந்த உதவி” – எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, மன்சூர் அலிகான், எஸ்.ஏ. சந்திரசேகர், விக்ரமன், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசும்போது இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், “எனக்கு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளின் மீது இருக்கும் கோபத்தை திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு எனக்குக் கிடைத்த சக்திவாய்ந்த ஹீரோ விஜயகாந்த் தான். அவரைத் தவிர வேறு யாரையும் தேடிப்போகவில்லை.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒருகாலத்தில் வெற்றிப்படங்களை கொடுத்தாலும், செலவு அதிகம் என்பதால் தயாரிப்பாளர்கள் அச்சப்பட்டனர். ஆனால், தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்தவர்களில் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முக்கியமானவர்கள்,” என்றார்.

விஜயகாந்தின் தன்மையைப் பற்றி அவர் மேலும் கூறும்போது, “கேப்டன் பிரபாகரன் வெற்றிபெற்றபின், பிற இயக்குநர்களை பெயரால் அழைத்தாலும், என்னை மட்டும் ‘டைரக்டர் சார்’ என்று மரியாதையுடன் அழைப்பார். அவருக்கு நன்றி, மனிதம் என்றால் அதற்கான அர்த்தமே விஜயகாந்த். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் போதும், பின்னர் பெரியண்ணா படத்தின் போதும், அவர் என்னிடம் காட்டிய மரியாதை மாறவில்லை,” என்றார்.

தனது மகன் விஜயின் சினிமா பயணத்தை நினைவுகூர்ந்த அவர், “விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு. 70 லட்சம் செலவில் எடுத்தாலும் வெற்றிபெறவில்லை. அவரை வளர்க்க ஒரு பெரிய நடிகருடன் நடிக்க வைக்க விரும்பினேன். பலரும் மறுத்தபோது விஜயகாந்திடம் கேட்டேன். அவர் உடனே, ‘எப்போது வேண்டுமானாலும் கால்சீட் எடுக்கலாம்’ என்று சொன்னார்.

செந்தூரப்பாண்டி படத்தில், 17 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் சூப்பர் ஹிட்டாகி, மிகப்பெரிய லாபம் வந்தாலும், ஒரு பைசாவும் அவர் எடுக்கவில்லை. நன்றி தெரிவிக்க, என் வீட்டருகிலிருந்த காலி இடத்தை அவரின் பெயரில் பத்திரம் பதிவு செய்தேன். அதற்கும் அவர் கோபப்பட்டார். எங்கள் உறவு நட்பைத் தாண்டியது. அவர் எப்போதும் என் மனதில் தனி இடம் பிடித்தவர்,” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

விழாவின் முடிவில், “இந்தப் படம் வெளியான பிறகு, தயாரிப்பாளர்கள் ஆர்.கே. செல்வமணியை தேடிச் செல்வார்கள்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: ACTOR VIJAYACTOR VIJAY KANTHCaptain PrabhakaranDIRECTOR CHANDRA SEKARtamil cinemaTHALAPATHU
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – வெடி விபத்தில் 3 பேர் பலி

Next Post

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

January 30, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.