நடுக்கடலில் சரக்கு கப்பல்… போலீஸார் விசாரணை

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு சரக்குக் கப்பல் ஒன்று கண்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு கடற்கரையிலிருந்து வடமேற்கே 144 கி.மீ தொலைவில் உள்ள விரிகுடாவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது, கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 18 ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு கடலில் குதித்து தப்பியுள்ளனர். கடலில் குதித்த 18 ஊழியர்களை மீட்க ஐஎன்எஸ் சூரத் என்ற கப்பல் விரைந்திருக்கிறது.அதுமட்டுமில்லாமல், தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்து 20 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளது.

கப்பலில் உள்ள தொழிலாளர்கள் கேரள கடற்கரையை அடைந்தவுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதல்வர் பினராயி விஜயன் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுருகிறார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்தான தகவல் தற்போது வரை தெரியவில்லை. மீட்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை ஈடுபட்டிருக்கிறது . தீ விபத்து ஏற்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய WAN HAI 503 என்ற கப்பல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version