June 29, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாஜக-வின் அடுத்த தலைவர் : பரிசீலனையில் நான்கு பேர்… ஆர்.எஸ்.எஸ். தாக்கம் அதிகரிக்கிறதா ?

by Priscilla
September 4, 2025
in News
A A
0
பாஜக-வின் அடுத்த தலைவர் : பரிசீலனையில் நான்கு பேர்… ஆர்.எஸ்.எஸ். தாக்கம் அதிகரிக்கிறதா ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாஜக தனது புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், இறுதி கட்ட பரிசீலனையில் நான்கு முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நட்டாவின் பதவிக்காலம் முடிந்தும் தலைவர் அறிவிக்கப்படவில்லை

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் ஏழு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் அடுத்த தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி, “உலகிலேயே பெரிய கட்சி என்கிறீர்கள்… ஆனால் ஒரே ஒரு தலைவரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லையா?” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்றத்தில் கேலி செய்திருந்தார்.

இந்த தாமதத்திற்கு பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

வலுவான தலைமையை கோரும் ஆர்.எஸ்.எஸ்

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வலுவான தலைவரை பாஜகவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி வருகிறது. அதன்படி, மாநில அளவிலும் வலுவான தலைவர்கள் பதவியேற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “75 வயது கடந்தவர்கள் பொது வாழ்வில் தலைமைப் பொறுப்புகளை விட்டு விலகி அடுத்த தலைமுறைக்கு இடமளிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இது பிரதமர் மோடிக்கான மறைமுகச் செய்தியாகவே கருதப்பட்டது. எனினும், பின்னர் பாஜக – ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சீராகும் வகையில் இரு தரப்பும் சமரசத்தில் ஈடுபட்டன.

பரிசீலனையில் உள்ள நான்கு பேர்

பாஜக தலைவருக்கான பரிசீலனையில் இறுதி கட்டத்தில் நான்கு முக்கிய தலைவர்கள் இடம்பிடித்துள்ளனர் :

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சௌஹான்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

ஒடிஷாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ரூபாலா பிரதமர் மோடிக்கே நெருக்கமானவர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அதேசமயம், சௌஹான் மற்றும் ஃபட்னவீஸ் ஆர்.எஸ்.எஸ் விருப்பப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்-ன் கைகள் பலப்படுகிறதா?

2014 முதல் 2024 வரை பாஜக முழுமையாக மோடி-ஷா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ் கரம் பலப்படுகிற சூழல் உருவாகியுள்ளது. மேலும், 2029 பொதுத் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக மோடிதான் இருப்பார் என பாஜக – ஆர்.எஸ்.எஸ் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, அடுத்த பாஜக தலைவர் யார் என்பதற்கான போட்டியில் ஆர்.எஸ்.எஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Tags: bjpbjp prisidentjp naddaPM MODIprime ministerRSS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தொடரும் உறவு : கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் ரஷ்யா – பெரும் லாபத்தில் இந்தியா

Next Post

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் : டிவி, ஏசி, கார் விலையில் பெரும் குறைப்பு !

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை
News

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்
News

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 
News

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026
Next Post
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் : டிவி, ஏசி, கார் விலையில் பெரும் குறைப்பு !

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் : டிவி, ஏசி, கார் விலையில் பெரும் குறைப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மல்லிகார்ஜுனா கோவில்

மல்லிகார்ஜுனா கோவில்

September 20, 2025
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

0
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

0
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

0
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

0
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Recent News

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.