ஊழல் என்ற வார்த்தை பாஜகவுக்கு தெரியாது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி கண்ணை கட்டிக்கொண்டு பேசுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

காங்கிரஸ் ஆட்சி ஊழல் மலிந்த ஆட்சியாக இருந்தது ராகுல் காந்தி கண்ணை கட்டிக் கொண்டு பேசுகிறார் தற்போது ஊழலற்ற சிறந்த நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி கண்ணைத் திறந்து பார்த்தால் தான் தெரியும் இந்த நாட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று.

2026-ல் தமிழக மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறப் போகிறது என்று தெரிவித்த அவர் திருமாவளவன் இரண்டு நிலைப்பாட்டில் தடுமாற்றத்தில் உள்ளார் இந்த கூட்டணியில் இருக்கலாமா வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார் விமர்சனம் செய்தார்.

தி.க என்பவர்கள் கலவரத்தை உண்டு செய்வதற்காக இருப்பவர்கள், பிஜேபி ஒருபோதும் மதவாத அரசியல் செய்வதில்லை, என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருப்பரங்குன்றம் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

மணிப்பூரில் அமைதி நிலவிகொண்டு வருகிறது. பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version