2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன, இதில் 7 பேர் பத்ம விபூஷண், 19 பேர் பத்ம பூஷண், 113 பேர் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வானார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கலைத்துறையில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தாமுதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், சீனி விஸ்வநாதன் ஆகியோர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற சிறப்புவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித்குமார் மிகவும் மதிப்புடன், முகத்தில் சந்தோஷம் பொங்க அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, பத்ம பூஷண் விருதை பெற்றார்.
அஜித்குமாரின் இவ்விருதுப் பெருமையை பார்வையிட அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். காதல் கணவர் இந்த அளவுக்கு உயரிய மரியாதை பெற்றதை நேரில் பார்த்த ஷாலினி, பெருமிதம் கொண்டு பூரித்துக் கொண்டார்.