“மெதுவடை மெதுவடைதான்யா” ஆச்சரியத்தில் அமெரிக்கா தொழிலாளர்கள்

அமெரிக்கா:: அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்ககளுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இந்திய பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் தயாரித்த மெதுவடை மற்றும் தேங்காய் சட்னியை அவர்களுக்கு அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெறும் உணவளிப்பு என்பது மட்டுமல்ல, இந்திய கலாச்சாரத்தின் உணர்வை வெளிப்படுத்தும் அந்த செயல் தொழிலாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உணவை பார்த்த தொழிலாளர்கள் ஆச்சரியத்துடன், “இது என்ன வகையான உணவு?” என்று கேட்டனர். அதற்கு அந்த பெண், “இது இந்தியாவில் பிரபலமான மெதுவடை. உங்கள் டோனட்டைப் போல தான் தோற்றம், ஆனால் இது காரமானது” என்று சிரித்துக்கொண்டே விளக்கம் அளித்தார்.

உணவை சாப்பிட்ட தொழிலாளர்கள், “நாங்கள் இதுவரை இதுபோன்ற சுவையை அனுபவிக்கவே இல்லையெனில்! எளிமையாக இருக்கிறது ஆனால் சுவை மிகச் சிறந்தது” என்று புகழ்ந்துள்ளனர். மேலும், உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இந்த வீடியோவை அந்த சாலை பணிகளை ஒப்பந்தத்தில் மேற்கொண்ட நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ள அந்த வீடியோக்கு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

“இந்திய கலாச்சாரம் உணவிலும் அன்பிலும் கலந்த ஒரு தனி அடையாளம்,” என்றும், “அதிசயமாக இருந்தாலும் உண்மையான மனிதத்துவம் இப்படிதான்!” என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம், இந்திய நல்வாழ்க்கை வழிமுறைகளும், பரிமாறும் கலாச்சாரமும் உலகின் மத்தியில் இடம் பிடிக்கிறது என்பதை மறு­முறை நிரூபித்துள்ளது.

Exit mobile version