ஆக்கூரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் நெகிழ்ச்சி தருணம் தள்ளாத வயதிலும் ஆசிரியர்களை அழைத்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் தாங்கள் நண்பர்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அனைவரும் ஒரே விதமான டீசர்ட் அணிந்திருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1975 – 76 ஆம் ஆண்டு SSLC படித்த முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஆக்கூரில் உள்ள தனிநாடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்கள் குடும்பத்தினர் பிள்ளை பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட பொழுதும் குழு புகைப்படம் எடுக்கும் பொழுது சிறு வயது போலையே ஒருவர் ஒருவர் முந்திக்கொண்டு நண்பர்கள் அருகில் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்வை தொடங்கி நிகழ்வில் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் தங்கள் ஆசிரியர்களை தள்ளாத வயதிலும் கையைப் பிடித்து அழைத்து வந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் மேலும் தங்கள் பள்ளியில் நடைபெற்ற பல இனிமையான நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர் மேலும் அனைவருக்கும் நினைவு பரிசு கேடயங்கள் வழங்கினர்.















