கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஆண்டில் நடை பெறஉள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.முக-பா.ஜ.க கூட்டணி அமைந்துள்ளதை உறுதிப்படுத்தினார். மேலும் பேசிய அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்
இதையடுத்து கூட்டணி ஆட்சி தோன்றுமா என்பது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்க, திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் கைகோர்க்கிறோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது முற்றிலும் தவறு என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, நெல்லையில் ‘வருங்கால முதல்வர்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா S. செல்லகுமார்ப் பெயரில் நெல்லையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் நெல்லை பாஜக நிர்வாகத்தில் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.