கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபிதா திடீரென்று மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார் தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் அதனை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அருள் சபிதா பணியாற்றி வருகிறார் அவரது வார்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அவரது வார்டில் நடைபெற்ற பணிகளை முறையாக செய்யவில்லை என்று ஆய்வு செய்தபோது தெரிய் வந்ததாகவும் இதனால் பெண் கவுன்சிலர் அருள் சபீதாவிற்கும் ஒப்பந்ததாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் பெண் கவுன்சிலர் என்றும் பாராமல் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து கவுன்சிலர் அருள் சபிதா மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தார். ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்ட தொடரில் ஒப்பந்ததாரர் பிடியில் மாநகராட்சி ஆணையர் இருக்கிறார் அதனால் தான் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாநகராட்சி கூட்டத் தொடரில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.













