மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காட்டில் டார்கெட் கல்வி குழுமத்தின் எவரெஸ்ட் கென் பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியின் நிறுவனத் தலைவர் மற்றும் தாளாளர் மோகன்ராஜ் தலைமையில் மாணவ மாணவிகள் மனித சங்கிலியாக நின்று ரத்த தானம் செய்வோம், ரத்தத்தை சேமிப்போம் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.