தென்காசி :
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் இயங்கும் அன்னை முதியோர் இல்லத்தில் உணவு உண்கின்றபோது ஏற்பட்ட உணவு ஒவ்வாமையால் மூவர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முதியோர் இல்லத்தில் 60 க்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வழங்கப்பட்ட உணவை உண்பதன் பின்னர், 11 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அதீத உடல்நலக்கேடுகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 பேரில் மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள்:
சங்கர் கணேஷ் (வயது 48, செங்கோட்டை),
முருகம்மாள் (வயது 45, செங்கோட்டை),
அம்பிகா (வயது 40, சொக்கம்பட்டி).
மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஆறு பேரும் மருத்துவமனையில் கண்காணிக்கப்படுகிறார்கள்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உடனே, தென்காசி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு ஒவ்வாமை ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் உணவில் விஷபிசை இருந்ததா என்பதையும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தென்காசி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.