சிதம்பரம் நேரு நகர் பகுதியில் ஒரு டாபர்மேன் நாயை அசிங்கமாக நடந்து கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் (30) என்ற நபர் நேரு நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு டாபர்மேன் நாயை வீட்டில் வளர்த்து வருகிறார். இதே பகுதியில் கூலித் தொழிலாளியான நாகராஜ் (49) என்பவர் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு, நாகராஜ் விக்னேஷின் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாயை நோக்கி நெருங்கியுள்ளார். பின்னர், அந்த நாயுடன் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அதனை எதிர்த்த நாய் சத்தம் போட்டதால், கோபமடைந்த நாகராஜ் தனது அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து, நாயின் பாலுறுப்பில் குத்தியதாக கூறப்படுகிறது.
நாயின் கத்தும் சத்தம் கேட்ட விக்னேஷ் வெளியே வந்து பார்த்தபோது, நாகராஜ் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விக்னேஷ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீசார் நாகராஜை கைது செய்து, அவரது மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோர சம்பவம் அருகாமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.