விவாகரத்து பெற்று தரக் கோரி வழக்கறிஞரிடம் சென்ற நிலையில், தனது மனைவியை அதே வழக்கறிஞர் அபகரித்துக் கொண்டதாக, செம்பனார்கோயில் வர்த்தகர் சங்க தலைவர் புகார், புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவரை, காவல் நிலையத்தில் புகுந்து தகாத வார்த்தைகள் பேசி தாக்க முயற்சி செய்த நேரடி வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், டிஐஜி இடம் புகார் அளித்த நிலையில், வழக்கறிஞர்கள் கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு :-
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வர்த்தக சங்கத் தலைவராக பாலையா பதவி வகித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு தனது கடையில் வேலை பார்த்த சியாமளா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பள்ளி செல்லும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதே செம்பனார்கோயில் பகுதியில் தனியாக வீடு எடுத்து மனைவியை தங்க வைத்ததுடன், மாதம் செலவுக்கு பணம் அளித்து வருகிறார் மேலும் தனது இரண்டு குழந்தைகளையும் வெளியூரில் ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்து வருகிறார். இவரது மனைவியிடம் விவாகரத்து கோரி சீர்காழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், பாலையா விற்கு எட்டு ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த கணேசமூர்த்தி என்பவர் மூலம் வேறொரு வழக்கறிஞரை அமர்த்தி விவாகரத்து வழக்கு நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலையாவின் மனைவி சியாமளா உடன் வழக்கறிஞர் கணேசன் மூர்த்தி தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், சியாமளா வீட்டில் தங்கி இருந்த கணேசமூர்த்தியை, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பிடித்து காவல்துறையில் பாலையா ஒப்படைத்தார். அங்கு வந்த கணேஷ் மூர்த்தியான் நண்பரும் மற்றொரு வழக்கறிஞருமான ராஜ்குமார் ஆகிய இருவரும் இணைந்து, காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதுடன், காவல் நிலையம் உள்ளே உட்கார்ந்து இருந்த பாலையாவை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை, தொடர்ந்து பாலையா தஞ்சை தரக டிஐஜி இடம் நேரில் புகார் மனு அளித்த பிறகு, டி ஐ ஜி உத்தரவின் பெயரில் செம்பனார்கோயில் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கறிஞர்கள், பிணையில் வெளிவந்த நிலையில், பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிய வருகிறது. மேலும் மனைவி மூலம், கோடிக்கணக்கான தனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ள பாலையா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களான தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பாலையா, இது குறித்து மாவட்ட நீதிபதி மற்றும் பார் கவுன்சிலுக்கு புகார் அனுப்ப உள்ளதாக, தெரிவித்துள்ளார் காவல்துறையினர் தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பாலைய குற்றம் சாட்டியுள்ளார்.
பைட்: –
பாலையா – செம்பனார்கோயில் வர்த்தகர் சங்கத் தலைவர்

















