கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது-பல வண்ண, வடிவமைப்புகளில் 1 அடி முதல் 10 அடி உயரம் வரை கொண்ட விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வாங்கி செல்கின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள கோவில்கள், வீடு, அலுவலகங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். மேலும், பல இடங்களில் பொதுமக்கள் பிரம்மாண்ட சிலைகளை வைத்து வழிபடுவர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல சூரங்குடி பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள் 2 அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்ப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். முருகரை சேர்த்து வைக்கும் விநாயகர், சிவலிங்கத்தை வைத்திருக்கும் விநாயகர் , விதைப்பிள்ளை விநாயகர், யானை விநாயகர், கஜமுக விநாயகர், கற்பக விநாயகர் எனபல வண்ண, வடிவமைப்புகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் தயார் செய்த விநாயகர் சிலைகளை கண்டு ரசித்து தங்களுக்கு கண்களைக் கவர்ந்த விநாயகர் சிலைகளை வாங்கி செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். பேட்டி: தா.பாலசுப்பிரமணியம், இந்து மகா சபா மாநில தலைவர்

















