நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் பூங்குழலி தம்பதியினர், இன்று மயிலாடுதுறைக்கு திரும்பினர், மாவட்ட நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது, வெள்ளத்தில் தப்பி பிழைத்த நிமிடங்கள் குறித்து, உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட தம்பதியினர் :-
மயிலாடுதுறையிலிருந்து ஏழு பேர் உள்ளிட்ட 57 பேர் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள சூப்பர் யாத்திரை ஏஜென்சி என்ற சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலமாக மூன்று பேருந்துகளில் 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் கடந்த 26ஆம் தேதி நேபாளில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொண்டனர். மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரில் மணிமேகலை, ரெத்தினகுமார், பொன் பூங்குழலி, ஆகிய மூன்று பேர் உயிர்பிழைத்தனர். மீதமுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் காணாமல் போயினர். மயிலாடுதுறை சேர்ந்த முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சிவஞானம், வெங்கட்ராமன் ராஜேஸ்வரி, புஷ்பலதா உள்ளிட்டவர்களின் தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் தப்பி பிழைத்த 21 பேரும் பாதுகாப்பாக சென்னை வந்து சேர்ந்த நிலையில் இன்று மயிலாடுதுறை தில்லை நகரை சேர்ந்த ரத்தினகுமார் பூங்குழலி தம்பதியினர் வீட்டிற்கு வந்தனர். உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். உறவினர்களை பார்த்தவுடன் கண்ணீர் மல்க நடந்த நிகழ்வுகளை தம்பதியினர் பகிர்ந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் தம்பதிகளை வீட்டில் சந்தித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நேராக பூஜை அறைக்கு சென்று தங்களுடன் சென்றவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்த தம்பதியினர் அளித்த பேட்டியில். 21 பேரும் கூட்டு முயற்சியால் மலை மேல் ஏறி தப்பிப்பிழைத்ததாகவும், தன் புடவையின் உதவியால் அனைவரும் மேலே ஏறியதாகவும், பேருந்தை விட்டு கீழே இறங்கி இருந்தால் 21 பேரும் உயிரிழந்திருப்போம் என்றும் தன் கணவர் கீழே குதித்து மேலே ஏற முடியாதவர்களை தன் தோளில் ஏற்றி உதவியதாகவும் தெரிவித்தார்.
பேருந்தில் இருந்து கீழே இறங்கி இருந்தால் உயிர் போயிருக்கும் கடவுள்தான் காப்பாற்றினார். மண், கற்கள், பாறைகள் நிறைந்த கரடு முரடான மழையின் மேல் ஏறி தப்பித்து அங்குள்ள முகாமுக்கு சென்ற நிலையில் தொடர்ந்து இந்திய தூதரகம் தங்களை பத்திரமாக மீட்டு வந்ததாகவும் டெல்லியில் தமிழக அமைச்சர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் மற்றவர்களின் நிலை ஏதாவது உங்கள் மூலமாக தெரிய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தெரிவித்த பூங்குழலி நேபால் மற்றும் மத்திய மாநில அரசுகளின் உதவியாளையே பத்திரமாக வீடு திரும்பியதாக தெரிவித்தார்.














