கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்த கஞ்சாநகரம் கிராமத்தில் பழமையான
ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயம் பொதுமக்கள் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்தில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது நான்காவது கால யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்















