மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மகளிர் வார்டில் அத்துமீறி நுழைந்து கதவு கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவன செக்யூரிட்டியாக பணியாற்றி வருபவர் அபிஷேக் (வயது 25). இவர் அரசு மருத்துவமனையில் 5-வது மாடியில் உள்ள மகளிர் வார்டில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது அங்கு அத்துமீறி நுழைந்த திருவாலங்காடு விஜயகுமார் மகன் கோகுல் (19) என்பவரை தடுத்து நிறுத்தினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த கோகுல் அருகில் இருந்த இரும்பு ஸ்டாண்டை எடுத்து அரசு மருத்துவமனையின் கதவில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்தார். தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகுலை கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து செக்யூரிட்டி அபிஷேக் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கோகுலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.















