சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்த புகாரில் இரு தரப்பு இஸ்லாமியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பல மசூதிகளுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மூத்தவல்லிகள் பராமரித்து வந்தனர்.
இதில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பராமரித்து வரும் மூத்தவல்லிகள் முறைகேடாக விற்பனை செய்ததாக சமூக ஆர்வலர் வாஜித் என்பவர் குற்றம் சாட்டி அதை விசாரிக்க வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தும் 150-க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தும் வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முறைகேடாத விற்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விபரங்களை விசாரிக்க 200க்கும் மேற்பட்டோர் மசூதிக்குள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் விசாரிக்காக அழைக்கிறோம் என்று சமாதானம் செய்து சென்றனர்.
இதன் அடிப்படையில் புகார் அளித்த வாஜித் தரப்பிலான இஸ்லாமியர்களும் வஃக்பு சொத்துக்களை பராமரித்து வந்த மூத்த வல்லிகளும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக போலீசாரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது















