சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் இடியாகவும் இருந்தது இந்த சூழலில் இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்கள் கொண்டுவந்த தனி தீர்மானத்திற்கு 23.08.2010 முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முழுவதுமாக விலக்கயளிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்துள்ளார் உண்மையாக வரவேற்கத்தக்கது
இந்த தீர்மானத்தை ஏற்று தேசிய கல்விக் கும்ம் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி சட்டத்திருத்ததை கொண்டவரும் தமிழ்நாட்டில் உள்ள 1லட்சத்து 75 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை நிலைருத்த வேண்டும்
தீர்மானத்தை கொண்டுவந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்களுக்கும் தீர்மானத்தை ஆதரித்த திமுக, அதிமுக,காங்கிரஸ், பா.ம.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகள் உள்ளி அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
















