பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட வேண்டும் ஜே சி பி பிரபாகர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் ஏகாம்பர ரெட்டியார் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் கலந்து கொண்டு பேசியதாவது
50 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் வேறு இப்போது இருக்கின்ற அரசியல் வேறு
ஞாயம் தர்மம் சிந்தனை உடன் வாழ்ந்தார்கள் அப்போது அரசியலுக்கு இவர்கள்தான் வரவேண்டும் என்று இருந்த காலம் இப்போது யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற கால சூழ்நிலை மாறி உள்ளது
ஒரு மாற்றம் வேண்டுமென்று விரும்புபவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் சி எம் ஜோசப் விஜய் அவர்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று கருதி தான் இந்த பதவியில் என்னை உட்கார வைத்தார்
கட்சி ஜாதி பாகுபாடு இன்றி தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது
அகிலம் போற்றுகின்ற தலைவராக வாழ்பவர் நமது தமிழ்நாடு முதலமைச்சர் சி.எம். ஜோசப் விஜய் அவர்கள் நாம் என்ன செய்கிறோம் யாருக்கு எதுவும் இல்லை என்று இருக்கக் கூடாது என்று நமது முதல்வர் நினைத்து வருகிறார்
ஏகாம்பர ரெட்டி அவர்கள் பவ்வியமாகவும் மக்களோட இணைந்து பணியாற்றியவர் அவர் போன்று இன்று யாரும் இல்லை அமரர் ஏகாம்பர ரெட்டி அவர்கள் காந்தியை கடைப்பிடித்து காமராஜ் கரம் பிடித்தவர் அவர் போன்று அனைவரும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
முன்னதாக அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.















