மயிலாடுதுறை சின்ன கடைத் தெரு நகராட்சி அலுவலகத்தின் முன்பு தமிழக வெற்றி கழகத்தின் நூறாவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தின் முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சி எஸ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் கடந்த நிலையில் அரசின் சிறப்பு திட்டங்களான சிங்கப்பெண்கள் திட்டம், 200 யூனிட் மின்சார திட்டம் வெற்றிக் கழகம் சார்பில் வீடு வழங்கும் திட்டம், உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக வெற்றி கழகம் செயல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்த உள்ளன.
நிகழ்ச்சிக்கு முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுக் கூட்டத்தில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.















