500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் புறநமைக்கும் திட்டத்தை நீர்வள துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் பஞ்சாயத்து புத்தூர் ஏரியில் அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கி வைத்தார். புதியதாக தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் பொறுப்பேற்றுடன் நீர்வளத் துறை அமைச்சர் முதல் முறையாக 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
திட்டத்தின் வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் சொல்லப்படுகிறது.
இந்த தொடக்க விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றார்கள்.















