நாட்டின் 80-வது சுதந்திரதின விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா தேசிய கொடியேற்றி வைத்து 16 நபர்களுக்கு ரூ.4,லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கோபித்துக் கொண்டு பாதியிலேயே சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து பின்னர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டு திறந்த ஜீப்பில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தலைமையிலான காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் 16 நபர்களுக்கு ரூ.4, லட்சத்து 77 ஆயிரத்து 956 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த முதல்நிலை அரசு அலுவலர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டவரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள்
தன்னை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக கூறி அதிகாரிகளை கண்டித்து விட்டு கோபமாக பாதி நிகழ்ச்சியில் இருந்து அங்கிருந்து சென்றுவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது















