ஸ்கூட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிய சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் புகார் அளித்தும் 15 நாட்கள் கழித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்..
மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன..…? நடவடிக்கை எடுக்க பயமா.? இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத இடத்தில் அவர்கள் இருக்கிறார்களா..?
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவர் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து தற்போது பணி ஓய்வு பெற்று அரசாங்கத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஒவ்வொரு மாதமும் தனது ஓய்வூதத்தை எடுப்பதற்காக குடவாசல் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் சென்று ஓய்வூதியத்தை எடுத்து வருவது வழக்கம்.
வழக்கம் போல பஞ்சமூர்த்தி தனது ஓய்வூத்தை எடுப்பதற்காக கடந்த 31/7/2026 அன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு குடவாசல் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ஓய்வூதிய பலமான 25 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு தனது ஸ்கூட்டியின் அடியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி உள்ளார்.
ஓய்வூதிய பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் பஞ்சமூர்த்தியை மர்பநபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
பஞ்ச மூர்த்தி ஓய்வூதிய பணத்துடன் வீட்டுக்கு செல்லும் வழியில் பள்ளிவாசல் எதிரில் உள்ள பெட்டிக்கடையில் வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு வெற்றிலை பாக்கு வாங்கும் சமயத்தில், இரண்டு இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஸ்கூட்டியில் இருந்த ஓய்வூதிய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
அதாவது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பஞ்சமூர்த்திக்கு பின்னால் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை எடுப்பது பஞ்சமுகத்துக்கு தெரியாத வகையில் நின்று கொண்டனர்.
மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் பஞ்சமூர்த்தியின் ஸ்கூட்டியில் இருந்து பணத்தை எடுத்துக் கண்டு மற்றொரு மர்ம நபர் ஓட்டி வந்த வண்டியில் ஏறிக்கொண்டு செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகே உள்ள கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகி உளளன.
இந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மர்ம நபர்களின் புகைப்பட ஆதாரங்களுடன் குடவாசல் காவல் நிலையத்தில் பஞ்சமூர்த்தி கடந்த 02.08. 2026 அன்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பணத்தை மீட்டு தருகிறோம் எனக் கூறியுள்ளனர்.
சிசிடிவி ஆதாரங்களுடன், புகைப்படங்களுடன் புகார் அளித்தும் 15 நாட்கள் கடந்த பிறகும் காவல் துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் பஞ்சமூர்த்தி ஸ்கூட்டியில் இருந்து பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது















