திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் கிருத்திகை தினத்தில் சாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வாகனம் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதால் திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம் செய்தனர்………..
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா நிகழ்ச்சி
நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சாமி தரிசனம் செய்யும் காவடி எடுத்து வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்யும் முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே சேகர்பாபு தனது குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தார் அப்போது
மலைக்கோவில் அடிவாரத்தில் அவரது சொகுசு கார்கள் இரு கார்களை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகள் அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து அவரை வரவேற்க வந்த திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளிடத்தில் அவர் முன்னாள் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அவரது காரை விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் அப்பொழுது இவரது கார் மேலே வருவதற்கு அனுமதி இல்லை அதற்கான சிறப்பு அனுமதி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை ஆகையால் அவரது காரை மேலே அனுமதிக்க முடியாது மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீசார் தெரிவித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போலீஸ் அதிகாரிகளுக்கும் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கும் 30 நிமிடத்திற்கு மேலாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து திருக்கோயில் அதிகாரி தெரிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கார் மலை கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருகை தந்தது அதன் பிறகு சாமி தரிசனம் செய்துவிட்டு
எனது காரை மேலே விடவில்லை என்று தெரிவித்துவிட்டு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சென்று விட்டார்













