திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழாவிற்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வதாக அறிவிப்பு..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் (CUTN) 11-ஆவது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் 17, 2026 அன்று நடைபெற உள்ளது.
நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மாண்பமை சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாப் பேருரை ஆற்றி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக.. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது

















