அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உருவப்படம் எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்: –
அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் காரணமாக இந்திய விவசாயிகளின் உரிமை பறிபோகும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தபால் நிலையம் எதிரே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மோடி மற்றும் ட்ரம்ப் ஆகியோர் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதமர் மோடியின் உருவப்படத்தை தீயிட்டு எரித்து விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.













