புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
தமிழக அரசு ஓய்வூதியர்கள் புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் 1.7. 2026 முதல் ஆண்டு சந்தா தொகை 644 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இதனை கண்டித்தும், பணம் இல்லாத மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்தவும், மாவட்ட குறை தீர்க்கும் குழுவில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்களாக இணைக்க வலியுறுத்தியும், மருத்துவமனை ஓய்வூதியர்கள் இடம் பணம் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் மா நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினார் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












