காரிகோட்டை பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிகோட்டை பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது பழமை வாய்ந்த கிராம கோவிலான பொன்னியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டது இதன் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சியாக சாமிக்கு திருக்கல்யாணம் சுவாமி வாகனங்களில் வீதி உலா ஆகியவை நடத்தப்பட்டது இதன் நிறைவாக திருவிளக்கு பூஜை நடத்தினர் கோவில் வளாகத்தில் உற்சவர் பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரித்து வீற்றிருக்க செய்திருந்தனர் சாயக் கொண்டை தரித்து பட்டு வஸ்திரம் அணிந்து பொன்னியம்மன் அருள் பாலிக்க சாமிக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கினை ஏற்றி வைத்து பூஜை செய்தனர். பெரிய திருவிளக்கினை அம்மனாக பாவித்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடத்தப்பட்டது அப்போது பெண்கள் மலர்கள் மற்றும் குங்குமத்தை கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர் இதன் நிறைவாக ஒரே நேரத்தில் அனைவரும் விளக்கிற்கு தீப தூப ஆராதனை நடத்தினர் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொன்னி அம்மனை வணங்கி அருள் பெற்றனர்.














