திருவாரூரில் இரு வேறு பிரிவுகளை சேர்ந்த ஜோடிக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியை சேர்ந்த நெல்சன் (வயது 26) என்பவர் திருவாரூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த ஓராண்டு காலமாக கடலூர் மாவட்டம், மஞ்ச குப்பம், ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த நவீனா (வயது 24) என்பவரை காதலித்து வந்த நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்த நவீனாவின் பெற்றோர் இருவரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் அளிக்காத நிலையில் மணமகன் வீட்டார் சம்மதத்துடன் திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் முருகையன் தலைமையில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்வில் மணமகன் வீட்டார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்














