மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கருப்புக் கொடி ஏந்தி நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கைது செய்யப்பட்டனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக மத்திய அரசு கொடுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து அவர்களுக்கு எந்த அடிப்படை சலுகைகளும் வழங்காததை கண்டித்து கருப்புக் கொடியுடன் நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த அமைப்பில் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் போராட்டத்தில் MNREGA சட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாநில அரசு 40% பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதால் மாநில அரசு அந்த பங்களிப்பை செய்யாததால் திட்டத்தில் 50 சதவீதம் நாட்கள் கூட வேலை வழங்கப்படுவதில்லை என கூறி புதிய திட்டமான வி பி ஜி ராம்ஜி இடத்தில் 100 நாள் வேலை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது மறுக்கப்படுவதால் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசின் நகலை எரித்து போராட்டத்தை ஈடுபட்டனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இதனால் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பாகி பரபரப்பாக காணப்பட்டது














