கன்னியாகுமரி மாவட்டம்: சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்- காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் பாதிக்கப்பட்ட அரசு ஊழியரிடமிருந்து பாதுகாப்பு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கட்கிழமை நாட்களில் பொதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நடைபெறும் இதில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து தங்களது பிரச்சினையை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுப்பது வழக்கம். அதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்வில் அரசு ஊழியரிடமிருந்து பாதுகாப்பு தர வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வ வினோதரணி (32) இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு பணியாளர் ஐயப்பன் என்பவருக்கும் சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண் தன் மூன்று வயது குழந்தை உடன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது எதிர்தரப்பினர் ஐயப்பன் முன்விரோதம் காரணமாக செல்வ வினோதரணியை சரமாரியாக தாக்கி உள்ளார் இதில் பலத்த காயமடைந்த செல்வ வினோதரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் எதிர் தரப்பினர் ஐயப்பன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அன்று முதல் செல்வ வினோதரணியை தொடர்ச்சியாக பெண் என்றும் பாராமல் பொது இடத்தில் வைத்து மிகவும் கீழ்த்தரமான ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன மன உளைச்சலுக்கு ஆளான செல்வ வினோதரணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்வில் தன்னைக் கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியரிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

















