சீர்காழி அருகே 54 ஆண்டுகளுக்குப் பிறகு திருநாங்கூரில்
திருப்பாற்கடலில் 7, நாள் தெப்ப உற்சவம் நடத்துவதில் சிக்கல்.
இருதரப்பினர் இடையே பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து சீர்காழி தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை இரு தரப்பினர் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புகழ்பெற்ற திருநாங்கூரில்
கடந்த 54, ஆண்டுகளுக்கு முன்பு
7, திவ்யதேச பெருமாள்களுக்கு தெப்ப உற்சவம் திருப்பாற்கடலில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருநாங்கூரில் உள்ள
7, கோயில் ஆதீனத்துக்கு சொந்தமான திருவண்புருஷோத்தமம் பெருமாள், ஸ்ரீ குடமாடுகூத்தப்பெருமாள், ஸ்ரீ மாதவப் பெருமாள், ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள், வைகுண்டநாத பெருமாள், ஸ்ரீ ராஜகோபால பெருமாள், ஆகிய 7, திவ்ய தேச பெருமாள்களும் திருநாங்கூரில் உள்ள திருப்பாற்கடலில் வரும் 21,ஆம் தேதி முதல் 27, ஆம் தேதி வரை 7, நாட்கள் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிட்டு முடிவு செய்தனர்.
இதனிடையே கிராமத்தில் ஒரு தரப்பினர், திருப்பாற்கடல் குளத்தில் வன்புருஷோத்தமன் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம் ஒரு மட்டும் திருப்பாற்கடலில் நடத்திக் கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் திருப்பாற்கடல் குளத்தினை 7,கோவில் தேவஸ்தானம் ஆக்கிரமிக்கும்
நோக்கத்தில், இதுவரை எந்த ஊர் கோவில் திருவிழாவிலும் தொடர்ந்து
7, நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தாத நிலையில் ஏழு நாட்கள் நடந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு தரப்பினர், அனுமதி வழங்கிய சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை 15,ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து திருவெண்காடு போலீசார் திருநாங்கூரில் தெப்ப உற்சவம் நடைபெறுவதில் இரு தரப்பினர் இடயே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக பேசி தீர்ப்பதற்கு சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வர்த்தை கூட்டம்
தாசில்தார் ராஜரத்தினம் தலைமையில் நடந்தது.
இதில் 7, நாட்கள் தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்த தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் கடந்த 1913, 1925, 1930, மற்றும் 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் தெப்ப உற்சவம் நடைபெற்றுள்ளதாகவும், பொருளாதார சூழ்நிலை காரணமாக பல ஆண்டுகளாக நடைபெறவில்லை எனவும், 7, பெருமாள் கோவில்களுக்கும் திருப்பாற்கடல் குளத்தில் வரும் 21,ஆம் தேதி முதல் 7 நாட்கள் தெப்ப உறசவம் நடத்திட 7, கோவில் ஆதீன நிர்வாகம் மற்றும்
ஊரில் உள்ள பஞ்சாயத்தார்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு , மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, தெப்ப உற்சவம் நடத்திட அனுமதிக்க வேண்டும் என பேசினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திருநாங்கூர் ராஜதுரை தரப்பினர் கூறுகையில்:
திருநாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள்களுக்கு தனித்தனியே கோவில் குளம் உள்ளது .அரசு குளமான திருப்பாற்கடல் குளத்தினை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 7, கோவில் தேவஸ்தான நிர்வாகத்தினர் தெப்ப உற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேற்படி குளத்தில் அரசு அனுமதி பெற்று மீன் குத்தகை விடப்பட்டுள்ளதாகவும், குளத்தை சுற்றி அமைந்துள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர்.
அரசு குளத்தில் தெப்ப உற்சவம் 7, நாட்கள் நடைபெற்றால் ஊரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனவும், அந்தந்த பெருமாள் கோவில் குளத்தில் தெப்போற்சவம் நடத்திக் கொள்ள எவ்வித ஆட்சேபனையும் இல்லை. எனவும் தெரிவித்தனர்.
இரு தரப்பினர் தெரிவித்த கருத்துக்களால் அமைதி பேச்சு வார்த்தையில் எவ்வித சமரசமும் ஏற்படாத நிலையில் ஆர்டிஓ தலைமையில் மீண்டும் இருதரப்பினர் பங்கேற்கும் அமைதி பேச்சு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் பரிந்துரை செய்தார். அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படாத நிலையில் வெளியில் வந்த இருதரப்பினர் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது















