சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மருதங்குடியை சேர்ந்தவர் விஜயபாலன் இவர் கம்பி பிட்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.இவர் வீட்டிற்கு அருகிலேயே இவரது தாய் தமிழரசி விவசாய கூலி வேலை இவரும் தனி வீட்டில் வருகின்றனர்.இன் நிலையில் இன்று இவர்களது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழரசியின் வீடு திடிரென தீ பிடித்து எரிய தொடங்கியது.காற்றின் வேகத்தின் காரணமாக அருகிலிருந்த விஜயபாலனின் வீடும் எரிந்துள்ளது.அருகிலிருந்தவர்கள் சீர்காழி தீயணைப்பு துறைக்கும் மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கத் தொடங்கினர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தண்ணீர் அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக மின்வாரியத்துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழரசி கூறுகையில்
தான் விவசாயக் கூலி வேலை மற்றும் 100 நாள் வேலையை செய்து வருகிறேன். வீடு கட்ட 40 ஆயிரம் ரொக்க பணமும் மூன்று பவுன் தங்கம் நகையும் வைத்திருந்தேன்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எனது வீடு மற்றும் எனது மகன் வீடுகளில் இருந்த டிவி,பிரிட்ஜ்,ஃபேன்,மோட்டார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது தமிழக அரசு தனக்கு இலவச வீடு கட்டி தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.














