சீர்காழி அருகே வேன் டயர் வெடித்த கவிழ்ந்த விபத்து- ஒருவர் உயிரழப்பு – 14 பேர் காயம். கோவிலுக்கு சென்று திரும்பிய போது நடந்தசோகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவு 12:30 மணி அளவில் ஊர் திரும்பியுள்ளனர் அப்போது வழியில் ஆத்துக்குடி கிராமத்தில் பின்பக்க டயர் வெடித்து வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் படிக்கட்டு அருகே அமர்ந்திருந்த கரைமேடு மாரிமுத்து மகன் முருகன்.65. என்பவர் வேனின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த
கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி.24, தேன்மொழி.40, ஜெயந்தி.45, கரிஷ்மா.14, சரிதா.39, லட்சுமி.35, அனுசியா.58, மங்கையர்க்கரசி.43, அஞ்சம்மாள்.55, தனலட்சுமி.60, இந்திரா.42, சாய்.04, ராக்கி.53, சாந்தகுமார்.35. ஆகிய 14 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு சத்தம் கேட்டு அருகில் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வைதீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்













