திருவாரூர் தியாகராஜர் ஆலய தெப்ப திருவிழா.. பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்..
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்
மூர்த்தி, தளம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. பிறக்க முக்தி தரும் மூலாதார தளமாகவும்… பன்னிரு திருமுறைகளிலும் பாட பெற்ற ஒரே திருத்தலமாக விளங்குவதும்..
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும்.. பஞ்சபூத தலங்களில் பூமிக்கு உரிய தலமாகவும்.. சர்வதோச பரிகார தளமாக விளங்குவதுமான.. பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்..
அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா 04.03.26 அன்று தொடங்கி 10.04.26 வரை நடைபெற்றது.
பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்கும் ஆழித்தேர் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது.
ஆழி தோட்டத்தை தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்..
இந்த நிலையில் தொடர்ந்து.. தியாகராஜர் ஆலயத்தின் பின் பகுதியில் குலமே கோயிலாக அமைந்துள்ள கமலாலயம் திருகுளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது..
இன்று தொடங்கி 10-ஆம் தேதி நாளை மறுநாள் வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த தெப்பமானது 2500 சதுர அடி பரப்பளவில் 36 அடி உயரத்தில் மூன்று அடுக்குகளுடன் 16 தூண்கள் அமைத்து காற்று நிரப்பப்பட்ட 432 பேரல்கள் மீது கட்டப்படுகிறது..சுமார் 500 பேர் வரை தெப்பத்தில் அமர்ந்து பயனிக்கும் விதமாக மிகவும் பாதுகாப்பான வகையில் கட்டப்பட்டு இன்று தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
முன்னதாக திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள தெப்ப உற்சவ மண்டபத்தில் இருந்து பார்வதி சமேத கல்யாண சுந்தரர் சுவாமி புறப்பாடு நடைபெற்று தெப்பத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.
ஐந்து வேலி பரப்பளவில் அமைந்துள்ள கமலாலய திருக்குளத்தில் இரவு 8 மணிக்கு துவங்கி விடியல் காலை வரை மூன்று முறை வலம் வந்தது. ஒவ்வொரு சுற்றிலும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது..பிரம்மாண்டமான தெப்பத்தினை நான்கு கரைகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்
வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் தெப்ப உற்சவம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது..
மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்.தியாகராஜன், இணை ஆணையர் கு.சா.சுமதி, உதவி ஆணையர் எஸ் இராஜா இளம்பெரும்வழுதி, செயல் அலுவலர் பி.எஸ் கவியரசு ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் துனை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் நகராட்சி சார்பில் நகர மன்றதலைவர் புவனப்பிரியாசெந்தில், நகராட்சி ஆணையர் தாமோதரன் ஆகியோர் மேற்பார்வையில் விழாவிற்கு வரும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் தற்காலிய கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிபடை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும்...பிரசித்தி பெற்ற தெப்பத் திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்ட, மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து தெப்ப உலா நிகழ்வை கண்டுகளித்தனர்.













