கையில் தீச்சட்டி ஏந்தியும், மருத்துவமனை சலைன் பாட்டில் மற்றும் காலி தண்ணீர் குடத்தினை கையில் ஏந்தியபடி வந்து வேட்பமான தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்கள், காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு :-
வேட்பு மனு தாக்களுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மட்டும் இல்லாமல் சுயத்தை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்த வருகின்றனர். தொகுதியின் பிரச்சினைகளை மீடியாக்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நூதனமான முறையில் அவர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். சீர்காழி தொகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் உள்ள நிலையை சுட்டிக் காட்டவும், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தியும், மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் சலைன் பாட்டில் மற்றும் காலி குடிநீர் குடத்தை கையில் ஏந்தி எப்படி சீர்காழி ஓதவந்தான் குடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மனு தாக்கல் செய்ய வந்தார் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து சீர்காழி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் இதேபோல் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நாம் மக்கள் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கமித்ரன் என்பவர் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும், திமுக அதிமுக வேட்பாளர்களை கண்டித்தும் கையில் அக்னி கொப்பரை சட்டியை ஏந்தி ஊர்வலம் ஆக வந்து மனு தாக்கல் செய்தார், அக்கினி கொப்பரையை கையில் இருந்து அகற்றிய பிறகு காவல்துறையினர் அவரை மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். நூதனமான மனு தாக்கல் சம்பவங்கள் பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

















