மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.14.67 லட்சம் மதிப்பீட்டில், டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு மேம்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது:-
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதத்திற்கு 650 முறை டயாலிஸ்ட் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 120 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவைப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய
ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.14.67 லட்சம் மதிப்பீட்டில், டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு மேம்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு சுத்திகரிப்பு இயந்திரத்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரே நேரத்தில் பத்து நபர்களுக்கு டயாலிசிஸ் செய்ய தேவையான தண்ணீரை வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி, தலைமை மருத்துவர் மருதவாணன் மற்றும் ஓஎன்ஜிசி அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.













