சீர்காழி அருகே காரில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர் கைது. கார் மற்றும் 480 மதுபாட்டில்கள் பறிமுதல் .
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளகுளம் பகுதியில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் காரினுள் 180 மி.லி அளவுக் கொண்ட 480 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் வெள்ளக்குளம் சண்முகம். (41. )என்பதும் டிரைவரான இவர் தெரிந்தவரின் காரை வாடகைக்கு என எடுத்துச் சென்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
விழா ஒன்றுக்காக வெளி மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக இந்த மதுபான பாட்டில்கள் கடத்திவரப்பட்டதாக கூறப்படுகிறது. மதுபான பாட்டில்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













